சிறப்பு பூஜைகள்

மணி விபரம்பௌர்ணமி அன்று
05.30 PMஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு யாக வேள்விகள் (ஹோமங்கள் ) நடைபெறும்.
07.00 PMஅபிஷேக ஆரதனை பூஜைகள் நடைபெறும்.
08.00 PM108 நாம அர்சனைகள், பூஜைகள் நடைபெறும்.
08.15 PMகோ பூஜைகள் நடைபெறும்.
08.30 PMஅன்னதானம் வழங்குதல் நடைபெறும்.
08.45 PMபிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
12.00 AMஇராக்கால அர்ச்சனை பூஜைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி முன்னிட்டு( 21/3 /2022) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் யாக வேள்விகள் நடைபெற்று சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது லட்சார்ச்சனை க்கு தேவையான பொருட்கள் யாக வேள்விக்கான பொருள்கள் பூஜைக்கான பொருட்கள் வழங்கலாம் மற்றும் அதற்கான நன்கொடையாக வாங்கலாம் அனைத்து பக்தர்களும் ராகு கேது பெயர்ச்சி பூஜையில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்

சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு மாசி 10 (22/ 2 /2022) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் பக்த பெருமக்கள் அபிஷேக பொருட்கள் பூஜை பொருட்கள் வழங்கலாம் அன்புடன் அழைக்கின்றோம்

வருகிற திங்கட்கிழமை காலை 8 மணியளவில் சிவபெருமானுக்கு சோமவார சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெறும் பக்த பெருமக்கள் பூஜை பொருட்கள் மற்றும் அதற்கான நன்கொடை நன்கொடை வழங்கலாம் அனைத்து பக்தர்களும் அன்புடன் அழைக்கின்றோம்

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியும் முன்னிட்டு மாசி ஒன்பதாம் தேதி ( 21 /2/ 2022) திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் அபிஷேக பொருட்கள் மட்டும் பூஜைக்கான பொருட்கள் அல்லது அதற்கான நன்கொடைகள் வழங்கலாம் அனைத்து பக்தர்களும் கோவிலில் வந்து அம்மனுடைய அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்

ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். அத்துடன் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். அனைவரும் வருக அன்னை ராஜ ராஜேஸ்வரியின் அருள் பெறுக

நமது கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு ஐம்பொன்னால் ஆன நந்தி சிவன் அம்பாள் உள்ளது ஐம்பொன் விக்ரகம் செய்ய இருப்பதால் அதற்கான நன்கொடையாக பொருளாகவும் வழங்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வியாழக்கிழமை முன்னிட்டு குரு பகவானுக்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது

சியாமளா நவராத்திரி முன்னிட்டு இரண்டாம் நாள் அலங்காரம் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு

வியாழக்கிழமை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் சியாமளா நவராத்திரி விழா 02/02/2022 புதன்கிழமை மாலை ஆறு முப்பது மணி அளவில் தங்க கலசம் வைத்து லலிதா சகஸ்ரநாமம் தேவி மஹாத்மியம் அர்ச்சனைகளும் பூஜைகளும் நெய்வேத்தியம் களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் வருகிற வியாழக்கிழமை (10/2/2022) இரவு சிறப்பான பூஜைகளும் நெய்வேத்தியம் நடைபெற்று விழா இனிதே முடியும் சியாமளா நவராத்திரியில் கலந்துகொண்டு லலிதா சகஸ்ரநாமம் /தேவி மஹாத்மியம் படித்தாலே கல்வியில் முன்னேற்றம் ஞானம் கிட்டும் வாக்கு பலிதம் உண்டாகும் தெய்வ அருள் பரிபூரண அருள் கடாட்சம் கிடைக்கும் சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது புராணம் ஆகவே பக்த பெருமக்கள் இந்த நவராத்திரி விழா விற்கு உதிரிப்பூக்கள் நெய்வேத்திய பொருட்கள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் கோவிலில் வழங்கலாம்.

சிவபெருமானுக்கு தை அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகங்களும் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது

காளியம்மன் அமாவாசை சிறப்பு பூஜை அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது காளியம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெறும் என்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது

மகா காளியம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜை தை அமாவாசையை முன்னிட்டு(31/1/2022 ) திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் காளியம்மன் பத்ரகாளியம்மன் அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை நடைபெறும் பத்ரகாளியம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பூஜை பொருட்கள் அபிஷேகப் பொருட்கள் கோவிலில் வழங்கலாம் அல்லது அதற்கு நன்கொடை வழங்கலாம் அனைத்து பக்தர்களும் கோவில் வந்திருந்து காளியம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்

தை அமாவாசை (31/1/2022) சிவபெருமானுக்கு தை அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு பித்ருக்கள் (முன்னோர்கள்) தோஷங்கள் நீங்க சாபங்கள் நீங்க சிவ பெருமானுக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு நைவேத்தியம் படைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும் பித்ரு தோஷ நிவர்த்தி மற்றும் பெற்றோர்கள் சாபங்கள் நீக்க சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் வில்வ அர்ச்சனை மற்றும் அன்னதானம் நெய்வேத்தியம் செய்து அன்னதானம் செய்ய கோவிலை அணுகலாம் மற்றும் அதற்கான பொருளக நன்கொடையாக கோவிலில் வழங்கலாம்

சீலைக்காரி அம்மன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகிறது பரிகாரம் செய்ய விரும்புவர்கள் பால் அபிஷேகம் மற்றும் பூஜை அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம் பூஜை அபிஷேகம் கலந்து கொள்ளலாம்

குருபகவான் பரிகார அபிஷேகங்களும் சிறப்பு அபிஷேகங்களும் ஒவ்வொரு வியாழக் கிழமையும் காலை எட்டு முப்பது மணி அளவில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது குரு பகவான் குரு ஜாதகரீதியாக நீசம் பரிகாரம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய ஒவ்வொரு வியாழக்கிழமை காலையில் எட்டு முப்பது மணி அளவில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெறுகிறது குருவுக்கு பரிகாரம் செய்ய விரும்புவர்கள் சிறப்பு அபிஷேகம் செய்பவர்கள் கோவிலில் அணுகலாம் பரிகாரம் செய்து கொள்ளலாம்

விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணியளவில் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெறும் தங்களுடைய ராசி நட்சத்திரத்திற்கு பாலாபிஷேகம் மற்றும் பூ மாலை சாத்தி விநாயகப்பெருமானின் அருளும் பரிகாரமும் செய்து கொள்ளலாம் அபிஷேகம் செய்ய விரும்புவர்கள் பூஜை செய்வதும் கோவிலை அணுகலாம்

நவகிரக பரிகார பூஜை சிறப்பு பூஜை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணியளவில் நவகிரகங்கள் பரிகார பூஜை சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜையும் நடைபெறும் நவகிரக பரிகாரத்துக்கு அவரவர் ராசி நட்சத்திரம் தெரியப்படுத்தி பரிகாரங்கள் அபிஷேகங்கள் பூஜைகள் செய்து கொள்ளலாம் பக்த பெருமக்கள் அன்புடன் அழைக்கின்றோம். நவகிரக பரிகார பூஜை சிறப்பு பூஜையும் ( 29 /1/ 2022) சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெறும்

அனுமான் சிறப்பு பூஜை தை மாதம் 16ஆம் நாள் (29/ 1 /2022) சனிக்கிழமை மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் காலை 10 மணியளவில் சிறப்பு பூஜைகள் சிறப்பு பூஜைகள் வடைமாலை சாத்தி வெற்றிலை மாலை சாத்துவது மற்றும் நெய்வேத்தியம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் வர மாலை சாத்தும் அவர்கள் வெற்றிலை மாலை சாத்துவது துளசி மாலை சாத்தி நெய்வேத்தியம் பொருட்கள் வழங்குபவர்கள் நன்கொடை வழங்குபவர்கள்நன்கொடைகள் மற்றும் பொருளாகவும் கோவில் வழங்கலாம் தங்களது ராசி நட்சத்திரத்தை கோவில் தெரியப்படுத்தி அர்ச்சனையும் செய்து கொள்ளலாம் மற்றும் பரிகார நிவர்த்தி செய்துகொள்ளலாம் மூல நட்சத்திர பரிகாரம் மற்றும் சிறப்பு பரிகாரங்கள் பூஜைகள் நடைபெறும் பக்த பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்

சனிப்பிரதோஷம் தை மாதம் 16ஆம் நாள் (29 /1/ 2022) சனிக்கிழமை சனி பிரதோஷம் நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் அபிஷேக பொருட்கள் மற்றும் பிரசாத பொருட்கள் பொருளாகவோ& நன்கொடைகள் கோவிலில் வழங்கலாம் அனைத்து பொதுமக்களும் சனிப்பிரதோஷம் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்

கால பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டவர்கள் சோம சுந்தர பாண்டியன் அவர்கள் குடும்பத்தார்கள் காலபைரவருக்கு சூலாயுதம் வழங்கியுள்ளார்கள் மற்றும் உதவி செய்தவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டவர்கள் அருணாச்சல நகரைச் சேர்ந்த முருகேசன் ஞான திலகம் அவர்களும் மற்றும் சேது மாநகரைச் சேர்ந்த ரவி பரமேஸ்வரியம்மன் கால பைரவரை தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது காலபைரவருக்கு சூலாயுதம் வழங்கியவர் சோம சுந்தர பாண்டியன அவர்கள் குடும்பத்தார்கள்

சிவபெருமானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார சிறப்பு அபிஷேகம் காலை 8 மணிக்கு நடைபெறும் என்று திங்கட்கிழமை சோமவார பூஜை சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பாலாபிஷேகம் மஞ்சள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்றது

தேய்பிறை அஷ்டமி பூஜை (25 /1 /2022) தை மாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை

காலபைரவர் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ( 12 /1 /2022) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் சிறப்பு அபிஷேக பொருட்கள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் வழங்கலாம் அல்லது அதற்கான நன்கொடையாக வழங்கலாம் பக்த பெருமக்கள் பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

வெள்ளிக்கிழமை காலை சங்கடகர சதுர்த்தி விநாயகப் பெருமானுக்கு (21/1/2022) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் பக்த பெருமக்கள் விநாயகப் பெருமானுடைய தேவையான அபிஷேக பொருட்கள் பூஜைக்கான நன்கொடைகள் கோவிலில் வழங்கலாம்

ஐயப்பனுக்கு தை மாதம் ஆறாம் தேதி ( 19 / 1 / 2022) புதன்கிழமை காலையில் அபிஷேகங்களும் மாலையில் சிறப்பு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற உள்ளது புஷ்பஞ்சலி க்கு தேவையான பூக்கள் பூமாலைகள் கோவிலில் வழங்கலாம் அதற்குண்டான நன்கொடைகள் கோயிலில் நெட்பேங்கிங் GPAY வழங்கலாம் அனைத்து பக்த பெருமக்கள் மாலை 6 மணிக்கு ஐயப்பன் புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்தவர்கள் ராஜேஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த உயர் திரு முருகேசன் ஞான திலகம் அவர்களும் சென்னையைச் சேர்ந்த உதயணன் காயத்ரியும் அவர்களும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் குணசுந்தரி அம்மா அவர்களும் கம்மாக்கரை சேர்ந்த கணேசன் ராதிகா அவர்களும் இருளாண்டி தேவர் காலனியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் அவர்களும் பூஜையில் கலந்து உள்ளார்கள்.

தைபூசம் முன்னிட்டு முருகப்பெருமானுக்கு (18 / 1 / 2022) ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை காலை 8 மணி முதல் மு௫௧ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பால், தயிர் இளநீர் ஆகிய 16 வகையான சிறப்பு பிஷேகங்கள் நடைபெற உள்ளது மற்றும் சிறப்பு அலங்காரங்கள் பூஜையும் நடைபெறுகிறது. பக்த பெருமக்கள் அனைவரும் தைப்பூச அபிஷேகம் மற்றும் பூஜைகள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் அபிஷேக பொருட்கள் மற்றும் பூமாலைகள் கோவிலில் வழங்கலாம் அதற்குண்டான நன்கொடைகளையும் கோவிலில் வழங்கலாம்

பௌர்ணமி பூஜை மற்றும் சோமவார திங்கட்கிழமை சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை செய்பவர்கள் உயர்திரு பரணி குடும்பத்தார்கள் அருணாச்சலேஸ்வர் நகரைச் சேர்ந்த உயர் திரு முருகேசன் ஞான திலகம் அவர்கள் குடும்பத்தார்கள் சென்னையை சேர்ந்த உதயவணன் காயத்ரி அம்மா அவர்கள் குடும்பத்தார்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் குணசுந்தரி அம்மாள் குடும்பத்தார்கள்.

ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை தை நாலாம் தேதி (17 /1/ 2022) திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பௌர்ணமி பூஜை சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெறும் அதன்பின்பு அம்மன் பிரசாதமாக அன்னதானம் வழங்கப்படும். அன்னதானத்திற்கு மற்றும் பூஜைக்கான பூஜை பொருட்கள் கோவிலில் வழங்கலாம் மற்றும் அதற்கான நன்கொடைகள் மற்றும் நெட்பேங்கிங் வழங்கலாம் அனைத்து பக்தர்களும் மக்களும் பௌர்ணமி பூஜை அபிஷேகங்களை யூடிபில் அனைவரும் கண்டுகளிக்கலாம்.

ஐயப்பனுக்கு மகர ஜோதி சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்தவர்கள் மதுரை மதுரை அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த d.o. முருகேசன் மற்றும் துணைவியார் ஞானத் தலைவி அம்மா அவர்கள் குடும்பத்தார்கள் மதுரை அருணாச்சலேஸ்வரர் நகர் முருகேசன திலகவதி அம்மா குடும்பத்தார்கள் சென்னையை சேர்ந்த உதய வானன் காயத்ரி அம்மா குடும்பத்தார்கள் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த குணசுந்தரி அம்மா குடும்பத்தார்கள்.

சிவபெருமானுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை சோமவார சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெறும் காலை 8 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் மாலை 6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறும் பக்த பெருமக்கள் சிவனுக்கு அபிஷேக பொருட்கள் பூஜை பொருட்கள் மற்றும் அதற்கான நன்கொடையை கோவிலில் வழங்கலாம் அல்லது நெட்பேங்கிங் வழங்கலாம் அனைத்து பொதுமக்களும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ ஐயப்பனுக்கு மகரஜோதி பூஜை தை ஒன்றாம் நாள் (14 /1/ 2022) வெள்ளிக்கிழமை மாலை (ஐந்து முப்பது மணி ) அளவில் மகரஜோதி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெறும் மகரஜோதி பூஜையில் அனைத்து பக்த பெருமக்கள் கலந்துகொண்டு ஐயப்பனின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம் அபிஷேகப் பொருள்கள் பூமாலை பொருட்கள் செய்வதற்கான பொருட்கள் மற்றும் நன்கொடைகள் கோயில் வழங்கலாம் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களுடைய பெயர் ராசி நட்சத்திரத்தை கோவிலில் தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மார்கழி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி (13/ 1/ 2022) மார்கழி மாதம் 29ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் பெருமாளுக்கு தயிர் சாதம் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் ஜீரா தோசை ஆகிய நைவேத்தியங்கள் மற்றும் வடமாலை துளசி மாலை மற்றும் பூமாலைகள் அலங்காரங்கள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற உள்ளது அபிஷேக பொருட்கள் பூஜை பொருட்கள் நெய்வேத்திய பொருட்கள் செய்வதற்கான பொருள்கள் கோவிலில் வழங்கலாம் மற்றும் அதற்கான நன்கொடைகளை கோவிலில் வழங்கலாம் அனைத்து பக்க பெருமக்களும் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்

ஸ்ரீ மஹா கால பைரவர் அஷ்டமி பூஜை வளர்பிறை அஷ்டமி பூஜை ( 9/1 /2022) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் அபிஷேக பொருட்கள் பூஜை பொருட்கள் மற்றும் அதற்கான நன்கொடையை கூகுள் பேய் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக கோவிலில் வழங்கலாம் அனைத்து பக்தர்களும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

சனிக்கிழமை இன்று நவ கிரகத்திற்கான சிறப்பு அபிஷேகம் பூஜை செய்தவர்கள் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த உயர் திரு ஏ ஆர் ராமசாமி- விஜய லட்சுமி அம்மாள் குடும்பத்தார்கள் பூஜை செய்துள்ளார்கள்.

சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை அலங்காரம். முருகப்பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம் பூஜை இருளாண்டி தேவர் காலனியைச் சேர்ந்த லலிதா அம்மாள் தமிழ்ச்செல்வன் அவர்கள் குடும்பத்தார்கள் பூஜை செய்துள்ளார்கள். முருகப்பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம் பூஜை இருளாண்டி தேவர் காலனியைச் சேர்ந்த லலிதா அம்மாள் தமிழ்ச்செல்வன் அவர்கள் குடும்பத்தார்கள் பூஜை செய்துள்ளார்கள்.

துர்க்கை அம்மன் பூஜை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை (10-30) மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெறும் அபிஷேக பொருட்கள் பூஜை பொருட்கள் வாழங்கலாம் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

(1/1/2022) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை ஐந்து முப்பது மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் அனைத்து பக்தர்களுக்கும் பெருமக்களும் தவறாக சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்படும் அதன் பின்பு ஆறு முப்பது மணி அளவில் பக்தர்களுக்கு அம்மன் அருள்வாக்கு அன்புடன் அழைக்கின்றோம் (8-30)மணி அளவில் பள்ளியறை பூஜை நடைபெறும் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்

பிரதோஷம் சிறப்பு பூஜை சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு இன்று (31/12/2021) வெள்ளிக்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் பக்த பெருமக்கள் அபிஷேக பொருட்கள் நெய்வேத்தியம்செய்வதற்கான பொருளாக அல்லது நன்கொடையாக கோவிலில் வணங்கலாம் அனைத்து பக்த பெருமக்களையும் பிரதோஷ வழிபாடு க்கு அன்புடன் அழைக்கின்றோம்

ஹனுமான் ஹனுமான் ஜெயந்தி விழா மார்கழி 18 (2/1/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அபிஷேக பொருட்கள் வெற்றிலை மாலை வடை மாலை கோவிலில் மாலை சாத்துவது கோவிலில் விவரங்களை அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் பொதுமக்களும் அபிஷேகங்கள் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அனுமனின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்

அருள்வாக்கு சிறப்புகள்